Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

திருவள்ளுவர் தமிழ் நாட்டின் தேசியப் புலவர், அவரது பெருமையும், உடைமையும் இந்து மக்களின் சொத்து. திருவள்ளுவரின் திருக்குறளும் மாணிக்க வாசகரின் திருவாசகமும் தமிழ்நாட்டின் உடலும் ஆன்மாவும் ஆகும். மனித இனத்தின் குணத்தையும் பண்பையும் நடத்தைகளையும் திருக்குறள் வளர்க்கிறது. திருவாசகம் தனது ஆத்மாவிற்கு வேண்டிய இன்சுவை உணவினை தெய்வீக அழகினை ஊட்டுகிறது. திருக்குறள் மனிதனின் புத்தியையும் மூளையையும் வளர்த்து மரியாதை கண்ணியம் மற்றும் நேர்மையுடன் கூடிய வாழ்க்கை வாழ வகை செய்கிறது.