Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

Naalaya Bharatham - நாம் யார் (மக்கள் என்ற அளவில்) என தீர்மானித்துக் கொள்ளாத வரை (தேசம் என்ற அளவில்) நாம் மேற்கொள்ள வேண்டிய தலையாய பணி எது என்பதை தீர்மானிப்பது இயலாது என்று ‘ஹூ ஆர் வி?’ (Who Are We?) என்ற தன்னுடைய முக்கியமான நூலில் சாமுவேல் ஹண்டிங்டன் பதிவு செய்கிரார். நாம் யார் என்ற புதிரை அவிழ்க்கும் முயற்சியில் நமது தேசம் ஈடுபட்டுள்ளது. நாளைய பாரதம் ஒளிமயமானதாக விளங்கிட வேண்டுமானால், பாரதத்தின் மக்களாகிய நாம் என்பதில் ‘பாரதம்’ என்றால் என்ன என்பது குறித்து கருத்தொற்றுமை காண வேண்டியது அவசியம். பாரத மக்களிடையே பெருமளவில் கருத்துப் பரிமாற்றம் கலந்தாலோசனைகள் வாயிலாக இதனைச் சாதிக்க முடியும். இவ்வாறு கருத்துப் பரிமாறிக் கொள்வதும் கலந்தாலோசனை செய்வதும் ஜனநாயகத்தின் ஆன்மா என்பதுடன் அது நமது கலாச்சாரத்தின் பிரிக்கமுடியாத அங்கமும் கூட.